ஓர் குட்டிக் கதை
தாழ்மை
🤫🤫🤫🤫
எனது சினிமா வாழ்க்கையில் புகழின் உச்சக் கட்டத்தில் நான் இருந்த போது, விமானம் மூலம் ஒரு முறை பயணம் செய்தேன்.
எனக்கு அருகில் இருந்த பயணி, ஒரு சாதாரண சட்டை, பேண்ட் அணிந்து அமர்ந்திருந்தார். வயதான மனிதர், நடுத்தர வர்க்கம், நன்கு படித்தவர் போன்று அவர் தோன்றினார். நான் யார் என்பதை மற்ற பயணிகள் கண்டு கொண்டார்கள்.
என் இருக்கையின் அருகில் வந்து ஹலோ சொல்லி கை கொடுத்தனர். ஆனால் இந்த மனிதர் மட்டும் என் இருப்பை உணரவும் இல்லை. என்னை கண்டு கொள்ளவும் இல்லை. ஒருவேளை, அவர் நாளிதழை உன்னிப்பாக படித்துக் கொண்டிருந்ததால், என்னை கவனிக்கவில்லையோ என எண்ணினேன்.
தேநீர் வழங்கப்பட்ட போது, அமைதியாக அதை எடுத்து, ரசித்து பருக ஆரம்பித்தார். என்னை அவருக்கு யார் என்று தெரியவில்லையா? அல்லது தெரிந்தும் தவிர்க்கிறாரா? என்னால் பொறுத்துக் கொள்ள முடியாமல், அவருடன் ஒரு உரையாடலைத் துவக்கும் முயற்சியில் நான் அவரை பார்த்து சிரித்தேன்.
அந்த மனிதரும் புன்னகை செய்து, 'ஹலோ' என்று சொன்னார். நாங்கள் பேச ஆரம்பித்தோம். சமூகம்,
பொருளாதாரம், அரசியல், என்று பல விஷயங்களை பற்றி பேசினோம். அவரின் பேச்சில், ஒரு லயிப்பும் ஈர்ப்பும், தேர்ந்த ஒரு நேர்த்தியும் இருந்ததை நான் உணர்ந்தேன்.
சினிமா மற்றும் திரைப் படங்கள் சம்பந்தமான விஷயங்களை நான் வேண்டுமென்றே கொண்டு வந்தேன். நீங்கள் திரைப்படங்கள் பார்ப்பீர்களா என வினவினேன். ஓ, மிக சில. பல ஆண்டுகளுக்கு முன்பு நான் பார்த்திருக்கிறேன் என அந்த மனிதர் பதிலளித்தார்.
நான் திரைப்பட துறையில் தான் இருக்கிறேன் என்று குறிப்பிட்டேன். அப்படியா? ரொம்ப நல்லது. நீங்கள் அந்த துறையில் என்ன செய்கிறீர்கள் என கேட்டார். நான் ஒரு நடிகர் என பதிலளித்தேன்.
அவரிடமிருந்து எந்த வித சலனமும் இல்லை.
அதன் பின் நாங்கள் இறங்கி வெளியேறும் போது,
உங்களுடன் பயணம் செய்தது மிக்க மகிழ்ச்சி.
நல்லது, என் பெயர் அமிதாப் பச்சன் என்றேன்.
அந்த மனிதரும் மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டே,
உங்களை சந்தித்த இந்த நாள், நல்ல நாளாக இருக்கட்டும் என கூறி: என் பெயர்: JRD டாட்டா.
மோட்டார் தொழில் செய்கிறேன் என்றார் பணிவுடன்.
நான் விக்கித்து நின்று விட்டேன். அன்றுதான் நான் கற்றுக் கொண்டேன் பணிவைப் பற்றி. பேரையும், புகழையும் வைத்து, நாம் தான் பெரிய ஆள், என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம். ஆனால், நம்மை விட வசதியிலும், அறிவிலும், படிப்பிலும் உயர்ந்தவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள்.
எப்போதுமே பணிவாய் பேசுங்கள்.
To Get Daily Story Contact +918148663456
நல்ல நடத்தை, பண்பு என்பது அறிவை விட மேலானது. வாழ்க்கையில் பல கால கட்டங்களில், அறிவு, பணிவிடம் தோற்றுப் போய் உள்ளது. பணிவும் நல்ல நடத்தையும், எல்லா இடத்திலும் வென்றுள்ளது. எந்த சூழ்நிலையிலும், பணிவுடனும், அடக்கத்துடனும் நடந்து கொள்ளுங்கள். அது உங்களை சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் கொண்டு போய் வைக்கும்.
-திரை நட்சத்திரம் அமிர்தாப்பச்சனின் அனுபவப் பகிர்வு!
என் அன்பு வாசகர்களே,
இது ஒரு அனுபவ சான்று. ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொன்றில் சிறந்தவர்கள். சிலர் ஞானத்தில், சிலர் திறமைகளில், சிலர் பொருளாதாரத்தில் என ஒவ்வொன்றிலும் சிறந்து விளங்குகின்றனர்.
எதில் சிறந்து விளங்கினாலும், மற்றவர்கள் அவர்களை மதிக்க வேண்டும் என்று ஆசைக்கொள்கின்றனர். இன்றைய கதை உண்ர்த்துவதோ தாழ்மை.
வேதமும் இதை தான் சொல்கிறது,
*33 கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.
நீதிமொழிகள் 15:33*
*12 அழிவு வருமுன் மனுஷனுடைய இருதயம் இறுமாப்பாயிருக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை.
நீதிமொழிகள் 18:12*
*11 தன்னைத் தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
லூக்கா 14:14*
நம்மை குறித்து நாமே மேன்மை பாராட்டாமல் தாழ்மையுள்ளவர்களாய் வாழ்வோம், மேன்மையானதை சுதந்தரிப்போம்.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!
-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x
-ஓர் குட்டிக் கதை
குதிக்கும் இருப்புச் சட்டி
🕳️🕳️🕳️🕳️🕳️🕳️🕳️🕳️🕳️
பொன்னி நாடு என்று ஒரு நாடு இருந்தது. அந்த நாட்டைப் பூவேந்தன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். பூவேந்தனுடைய பட்டத்து அரசியின் பெயர் மலர்க்கொடி.
பூவேந்தன் நாட்டை நன்றாக அரசாண்டு வந்தான். நாடு முழுவதும் நல்ல வளம் நிரம்பியதாக இருந்தது. இயற்கை வளமும் நல்ல அரசாட்சியும் இருந்ததால் அந்த நாட்டு மக்கள் எந்தக் குறையும் இல்லாமல் இருந்தார்கள்.
நாடு நன்றாக இருந்ததால் அரசனுக்கு வேலையும் குறைவாகவே இருந்தது. திருட்டு என்றும், அடிதடி என்றும், மோசடி என்றும் வரும் வழக்குகள் மிகக் குறைவாகவே இருந்தன.
அரசன் அரண்மனையில் நிறைய ஆட்களை வேலைக்கு வைத்திருந்தான். அரசி மலர்க்கொடி ஒவ்வொரு புது ஆளைச் சேர்க்கும் போதும், தேவை யில்லாதபோது எதற்காக ஆள் சேர்க்க வேண்டும் என்று கேட்பாள்.
“வேலைக்கு ஆட்கள் நிறைய இருந்தால் நமக்கு வசதி தானோ என்று கூறுவான் அரசன்.
“அரசே! அது தவறு. தேவைக்கு அதிகமாக ஆட்கள் இருந்தால், வேலை சரியாக நடக்காது” என்று கூறுவாள் அரசி மலர்க்கொடி.
“இந்த ஆள் நமது அமைச்சரின் உறவுக்காரன். இருந்துவிட்டுப் போகட்டுமே” என்று வேலைக்குச் சேர்த்துக் கொள்வான்.
இப்படி யார் வந்து வேலை கேட்டாலும், தகுதி பார்க்காமலும் . திறமையை நோக்காமலும் பலரை வேலைக்குச் சேர்த்துக் கொண்டான். இதனால் அரண்மனையில் வேலைகள் சரிவர நடக்கவில்லை.
ஒருநாள், அரண்மனைப் பெட்டகத்தில் இருந்த பொன் நாணயங்கள் காணாமல் போய்விட்டன. முதல் நாள் இருப்பு வைத்துப் போன நாணயங்கள் மறுநாள் காலையில் காணாமற் போனது கண்டு நிதி அதிகாரி கலங்கிப் போனார்.
இது வெளியில் தெரிந்தால் பூவேந்தன் ஆட்சிக்கே கெட்ட பெயர் உண்டாகிவிடும், என்று நிதியதிகாரி அரசனிடம் வந்து பொன் நாணயங்கள் காணமல் போன செய்தியை மிகக் கமுக்கமாகக் கூறினார்.
யாரோ கள்ளச்சாவி போட்டுப் பெட்டகத்தைத் திறந்திருக்கிறார்கள். உறுதியாக அரண்மனையில் உள்ள யாரோதான் – திருடியிருக்கிறார்கள் என்று தோன்றியது. வெளியில் இருந்து யாரும் திருடர்கள் வந்ததாகத் தெரியவில்லை.
ஆனால் யார்மீதும் ஐயுறுவதற்குத் தோன்ற வில்லை. அரண்மனையில் வேலை செய்யும் அனை வருமே உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அமைச்சர்கள், படைத்தலைவர்கள், அதிகாரிகள் ஆகியவர்களின் உறவினர்களே எல்லா வேலையிலும் இருந்தார்கள்.
அதனால் யார் மீது குற்றம் சொன்னாலும் அது சரியாக இருக்காது.
இதை எப்படிக் கண்டு பிடிப்பது என்று சிந்தித்துப் பார்த்தால் குழப்பமாகவே இருந்தது.
அரசன் பூவேந்தன் என்ன செய்வது என்று புரியாமல் விழித்துக் கொண்டிருந்தான்.
அப்போது முதலமைசர் அரசனிடம் வந்தார். “அரசே! நம் நாட்டின் எல்லையில் தங்க வயல் என்று ஓர் ஊர் இருக்கிறது. அங்கே அறிவாளன் என்று ஒரு குடியானவன் இருக்கிறான். பக்கத்து நாடுகளில் நடக்கும் பல திருட்டுக்களை அவன் கண்டு பிடித்துக் கொடுத்திருக்கிறான். அவனை அழைத்து வந்தால் நாம் இந்தத் திருடனைக் கண்டு பிடித்து விடலாம்” என்று கூறினார்.
பூவேந்தன் இரண்டு காவல் வீரர்களை அழைத் தார் . தங்க வயலுக்குச் சென்று அறிவாளன் என்ற அந்தக் குடியானவனை உடனே அழைத்துக் கொண்டு வருமாறு கூறினார்.
காவல் வீரர்கள் தங்க வயலுக்குச் சென்றார்கள். குடியானவனிடம் மன்னர் அழைத்துவரச் சொன்ன செய்தியைக் கூறினார்கள்.
நடந்த செய்திகளை அறிவாளன் அந்தக் காவல் வீரர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான். தன் வீட்டிலிருந்து சில பொருள்களை எடுத்துக் கொண்டான். காவல் வீரர்கள் கொண்டு வந்திருந்த குதிரை வண்டியில் ஏறிக் கொண்டான். அரண்மனைக்கு வந்து சேர்ந்தான்.
அறிவாளன் ஒரு ஏழைக் குடியானவன் தான். ஆகையால் அவன் முகத்தைப் பார்த்தவுடனேயே அரசருக்கு அவன் மீது நல்ல நம்பிக்கை உண்டாயிற்று.
அய்யா அறிவாளரே! பொன்னி நாட்டில், அதுவும் அரண்மனையில் ஒரு திருட்டு நடந்திருப்பது பெரிய அவமானமாய் இருக்கிறது. இங்கு வேலை பார்ப்பவர்கள் அனைவரும் உயர் குலத்தைச் சேர்ந்த வர்கள். பொய்யான குற்றச்சாட்டைக் கூறினால் அது அவர்கள் பிறந்த குலத்துக்கே அவமானமாகும். ஆகையால், இதில் நீங்கள் உண்மையான குற்றவாளி யைக் கண்டுபிடித்துத் தர வேண்டும். வெறும் அய்யத் தில் ஒருவரைக் குற்றம் சாட்டக்கூடாது, என்று மன்னர் விளக்கமாகக் கூறினார்.
“அரசே! நல்லவர்கள் மீது குற்றம் சாட்டக் கூடாது என்ற தங்கள் உயர்ந்த நோக்கத்தைப் பாராட்டுகிறேன். இவ்வளவு உயர்ந்த பண்புள்ள அரசரின் அரண்மனையில் திருட நினைத்த ஒரு கயவனும் நம் நாட்டில் இருக்கிறானே என்று நினைத்து வேதனைப்படுகிறேன்!” என்று கூறிய குடியானவன், அரசரைப் பார்த்து, “அரசே! மந்திர வித்தையில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா!” என்று கேட்டான்.
மந்திரங்களில் எனக்குச் சிறிது கூட நம்பிக்கை கிடையாது. மந்திரம் மாயம் என்பதெல்லாம் ஏமாற்று வித்தை என்று கூறினான் அரசன் பூவேந்தன்.
“அதுதான் தவறு. அரசே! இப்பொழுது மாய மந்திரத்தின் மூலமாகவே நான் இந்தத் திருட்டைக் கண்டுபிடிக்கப் போகிறேன். நான் கண்டுபிடிக்கா விட்டால், தாங்கள் எந்தத் தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள் நிறேன். ஆனால் நான் கண்டு பிடித்துக் கொடுத்தால் எனக்கு என்ன பரிசு தருவீர்கள்? என்று கேட்டான், அறிவாளன்.
அய்யா அறிவாளரே , நீங்கள் இந்தத் திருடனைக் கண்டு பிடித்துக் கொடுத்தால் உங்களுக்கு நீங்கள் குத்தகைக்கு உழும் நிலம் அத்தனையும் சொந்தமாக்கிப் பட்டா எழுதிக் கொடுக்கிறேன்” என்றான் பூவேந்தன்.
“மிக்க நன்றி! அரசே! மிக்க நன்றி. உங்கள் அரண்மனை வேலையாட்கள் அனைவரையும் வரச் சொல்லுங்கள். எனக்கு ஓர் அறை ஒதுக்கிக் கொடுங்கள். அந்த அறையின் மத்தியில் நான் கொண்டுவந்திருக்கும் இந்த மந்திர இருப்புச் சட்டியைத் தலை கீழாக வைப்பேன். ஒவ்வொருவரும்
இருப்புச்சட்டியின் மீது தம் உங்ளங்கையை வைத்து அழுத்த வேண்டும். நல்லவர்கள் கைப்படும் போது இருப்புச்சட்டி அசையாது. திருடியவர் கைப்பட்டவுடன் கூச்சலிட்டுக்கொண்டு குதித்தெழுந்து நிமிர்ந்துவிடும். இந்த மந்திர இருப்புச் சட்டியை இமயமலையிலிருந்து வந்த ஒரு தவ முனிவர் என்னிடம் கொடுத்துச் சென்றார். இதன் மூலம் நான் முப்பது திருட்டுக் களைக் கண்டு பிடித்திருக்கிறேன் என்று சொன் னான். அறிவாளன் சொன்ன இந்தச் செய்தி அரண் மனை முழுவதும் பரவிவிட்டது.
அரண்மனையில் வேலை பார்த்த வேலை யாட்கள் அறுபது பேரும் அறைவாசலில் வரிசையாக நிறுத்தப்பட்டார்கள். அறையின் மத்தியில் ஒரு மேசையின் மீது இருப்புச் சட்டி தலைகுப்புறக் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்தது. அறைச் சன்னல்கள் அனைத்தும் மூடி இருட்டாக்கப்பட்டது. கதவு திறக்கும் போது மட்டுமே உள்ளே மங்கலான வெளிச் சம் தெரிந்தது.
வேலைக்காரர்கள் ஒவ்வொருவராக அறைக்குள் சென்று வந்தார்கள்.
இருப்புச் சட்டி போடப் போகும் கூச்சலை எதிர் பார்த்துக்கொண்டு எல்லோரும் ஆவலோடு காத்திருந்தார்கள்.
ஒவ்வொருவராக அறைக்குள் போய் உள்ளங் கையால் இருப்புச் சட்டியைத் தொட்டுவிட்டுத் திரும்பி வந்தார்கள். இப்படி அறுபது பேரும் போய் வந்துவிட்டார்கள். இருப்புச் சட்டி கூச்சல் போடவும் இல்லை. எழுந்து குதிக்கவும் இல்லை. நிமிர்ந்து நிற்கவும் இல்லை.
அரசன் பூவேந்தனுக்குக் கோபம் கோபமாக வந்தது. அறிவாளன் என்ற இந்தக் குடியானவன் புரட்டுக்காரன் என்று முடிவு செய்தான்.
“மாயமாவது மந்திரமாவது? எல்லாம் பித்தலாட்டம்” என்று கூச்சலிட்டான்.
அறிவாளன், அரசன் எதிரில் வந்தான்.
“அவசரப்படாதீர்கள் அரசே! இதோ ஒரு நொடி யில் திருடன் அகப்படப்போகிறான். பாருங்கள்!” என்றான்.
அறுபது வேலையாட்களையும் மீண்டும் வரிசை யாக நிற்கச் சொன்னான்.
“எல்லோரும் இருப்புச் சட்டியைத் தொட்டீர்கள் அல்லவா? கையை நீட்டுங்கள்” என்றான்.
எல்லோரும் கையை நீட்டினார்கள். அறிவாளன் ஒவ்வொருவர் கையாகப் பார்த்துக் கொண்டு வந்தான்.
வரிசையில் நின்ற ஒருவரைப் பிடித்து இழுத்தான். அரசர் முன் கொண்டுவந்து நிறுத்தினான்.
“அரசே ! இவர் இருப்புச் சட்டியைத் தொடாமலே வந்திருக்கிறார். அதனால் தான் இருப்புச்சட்டி குதிக்கவில்லை; கூச்சல் போடவில்லை” என்றான்.
“இந்தக் குடியானவன் பொய் சொல்கிறான். நான் தொட்டேன்’ என்றான் அந்த ஆள்.
“சரி, மறுபடி தொடு பார்க்கலாம்” என்றான் அறிவாளன்.
அவன் தயங்கினான். பிறகு உண்மையை ஒப்புக் கொண்டான்.
அரசன் பூவேந்தனுக்கு இருப்புச் சட்டி குதிப்பதைப் பார்த்துவிட வேண்டும் என்று தோன்றியது.
திருடியதாக ஒப்புக் கொண்ட ஆளை இருப்புச் சட்டியைப் போய்த் தொடும்படி ஆணையிட்டான்.
அவன் இருப்புச் சட்டி என்ன தண்டனை கொடுக்குமோ என்று பயந்தான். “வேண்டாம் அரசே, நீங்கள் என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள். அதைத் தொட வேண்டாம்” என்று வேண்டிக் கொண்டான்.
“அறிவாளரே. இவன் இருப்புச் சட்டியைத் தொடவில்லை என்பதை எப்படிக் கண்டு பிடித்தீர்கள்?” என்று பூவேந்தன் ஆர்வத்தோடு கேட்டான்.
“அரசே! தங்களைப் போலவே எனக்கும் மாய மந்திரத்தில் நம்பிக்கை கிடையாது. இது நான் செய்த தந்திரமோ இருப்புச் சட்டியின் அடிப்புறத்தில் கரியைப் பூசி வைத்தேன். அதன் மீது, உள்ளங்கையை வைத்தவர்கள் கையில் கரி பிடித்திருந்தது.
To Get Daily Story Contact +917904957814
இந்த ஆள் மட்டும் பயந்து கொண்டு இருப்புச் சட்டியைத் தொடாமலே வந்திருக்கிறார். அதனால் இவர் கையில் கரி படியவில்லை. எனவே, இவர் தான் திருடர் என்று முடிவு செய்தேன்” என்றான்.
திருடியவனிடமிருந்து பணம் திரும்பப் பெறப் பட்டது. அவனுக்குச் சிறைத் தண்டனை கொடுத்தார் அரசர். வாக்களித்தபடி அறிவாளனுக்கு அவன் குத்தகைக்கு உழுத நிலம் முழுவதையும் விலை கொடுத்து வாங்கி உரிமையாக்கிக் கொடுத்தார்.
அறிவாளிகள் எப்பொழுதும் வெற்றி பெறுவார்கள்.
என் அன்பு வாசகர்களே,
தெரிந்தெடுத்தல் என்பது ஒரு ஆகச் சிறந்த பணியாகும். இன்றைய கதையில் அரசன் தன்னிடம் வேலை கேட்டு வருகின்ற அனைவருக்கும் வேலை கொடுத்தான். அதனால் அரண்மனையில் நபர்களின் எண்ணிக்கை உயர்ந்ததேயன்றி எந்த பலனுமில்லை. காரணம் அத்தனை ஆட்கள் இருந்தும் திருடுபோய்விட்டது.
மாத்திரமல்ல அத்தனை பெரிய அரண்மனையிலும் அந்த திருடனை கண்டுபிடிக்கும் அறிவாளி ஒருவர்கூட இல்லை. இப்படிப்பட்ட தெரிந்தெடுப்பு தான் அந்த அரசன் செய்தது. அதன் விளைவு வெளியிலிருந்து ஒருவன் அந்த திருடனை பிடிக்க ஏற்ப்படுத்தப்படுகிறான்.
எப்படிப்பட்ட தெரிந்தெடுத்தல் செய்கிறோம் என்பதை நீங்களே உங்களை சற்று ஆராய்ந்து பாருங்கள். அது வீட்டின் ஒரு சிறு தேவை முதற்கொண்டு எவ்வளவு பெரிய தேவையாயினும் அதை நாம் எவ்வாறு கையாள்கிறோம் என்பதே இன்றைய கதையின் நோக்கம். தேவன் எப்படிப்பட்டவைகளை தெரிந்தெடுப்பார் என்று வேதம் இவ்வாறு சொல்கிறது,
27 ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்; பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்.
*28 உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாயெண்ணப்பட்டவைகளையும், இல்லாதவைகளையும், தேவன் தெரிந்துகொண்டார்.
1 கொரிந்தியர் 1:27,28*
எனவே நாமும் எதையாகிலும் தெரிந்தெடுப்பதற்கு முன்பு தேவனிடம் கேட்டு அதைக்குறித்து ஆராய்ந்து பின்னர் தெரிந்தெடுக்கும் போது நமக்கும் அவர்களுக்கும் ஆசீர்வாதமாய் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்!!!!!
