===============
கேத்தரின் பூத் (1829-1890)
================
குழந்தை பருவம்: கேத்தரீன் ஜனவரி 17, 1829 இல் இங்கிலாந்தின் டெர்பிஷையர் நகரில் மெத்தடிஸ்ட் திருச்சபையில் அங்கத்தினர்களாக இருந்த மம்ஃபோர்ட் மற்றும் சாரா மில்வர்ட் தம்பதியினரின் ஐந்தாவது குழந்தையாக பிறந்தார். இவரது தந்தையார் திருச்சபையில் சாதாரண உதவி போதகராக பணியாற்றிக்கொண்டும், போக்குவரத்து வாகனம் தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டு இருந்தார். இவரது தாயார் சிறுவதிலிருந்தே கேத்தரீனுக்கு கிறிஸ்தவ போதனைகளையும், ஒழுக்கத்தையும், சமூக சேவைகள் பற்றியும், அதிகமாக கற்றுக்கொடுத்தார்.
பள்ளி வாழ்க்கை: சிறு வயதிலிருந்தே, கேத்தரின் கல்வி அறிவிலும் கேள்வி ஞானத்திலும் சிறந்து விளங்கினாள். தன்னுடைய 12 வயதிற்கு முன்பே வேதாகமத்தை எட்டு முறை முழுவதுமாக வாசித்து முடித்துவிட்டாள். இங்கிலாந்தில் தேனீர் தயாரிக்க பயன்படும் சீனி தயாரிக்க ஆப்பிரிக்க மக்களை அடிமைகளாக பயன்படுத்தப்படுவதை அறிந்துகொண்ட கேத்தரீன், அன்றிலிருந்து சீனி சாப்பிடுவதையும் கைவிட்டுவிட்டார். இரவு உணவிற்குப் பிறகு தனது தந்தையாரிடம் அன்றைய காலத்தில் இருந்த சமூகப் பிரச்சினைகளைப் பற்றி அதிகமாக விவாதித்தாள்.
வாலிய பருவம்: கேத்தரின் தன்னுடைய பதினான்கு முதல் பதினாறு வயது வரையேயான காலகட்டத்தில் வேதாகம கோட்பாடுகள்(Biblical Doctrines), மெய்யியல் போதனைகள்(Philosophy), இறையில் போதனைகள் (Theology), மற்றும் திருச்சபை சரித்திரங்கள் (Church History) ஆகிய பாடங்களை ஆர்வத்துடன் தானாகவே விரும்பி படித்தார். குறிப்பாக மெத்தடிஸ்ட் திருச்சபையை தோற்றுவித்த ஜான் வெஸ்லி, மற்றும் சார்லஸ் ஃபின்னி ஆகியோரின் புத்தகங்கள் வாசித்தபோது தனது சொந்த இரட்சிப்பை குறித்து உறுதிபடுத்தியதுமல்லாமல் கடவுளுக்கும் திருச்சபைக்கும் சேவை செய்யும் உந்துதலை பெற ஆரம்பித்தார்கள்.
கேத்தரீன் இளம் வாலிபர் ஐக்கியத்தின் பொறுபாளராகவும் (Juvenile Temperance Society), ஒரு கிறிஸ்தவ பத்திரிகைக்கு கட்டுரைகளை எழுதிக்கொண்டிருக்கவும் செய்தார். கேத்தரீன் நன்றாக பாடுபவராகவும் இசையை மீட்டுபவராகவும் இருந்ததால் அங்கிருந்த Band of Hope என்ற அமைபில் அங்கத்தினராக இருந்தார். இவர் லண்டனில் Brixton பகுதியில் இருந்த வெஸ்லியன் மெதடிஸ்ட் திருச்சபையில் அங்கத்தினராக இருந்து தீவிர உறுப்பினராக திருச்சபையில் செயலாற்றினார்.
மெதடிஸ்ட் திருச்சபை சீர்த்திருத்தம்: கேத்தரின் வாழ்ந்த காலத்தில் இருந்த மெத்தடிஸ்ட் திருச்சபைகளில் அதிகார துஷ்பிரயோகங்களினாலும், அரசியல் பிரச்சினைகளினாலும் கூச்சல் மற்றும் குழப்பங்கள் நிறைந்து இருந்ததினால் திருச்பை தடுமாறிக்கொண்டு இருந்தது. இந்நிலையில் மகிமையை இழந்துகொண்டிருந்த மெத்தடிஸ்ட் திருச்சபையில் சீர்திருத்தங்கள் தேவை என்று பலர் குரல் கொடுக்க ஆரம்பித்தார்கள். கேத்தரீனும் இதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இதனால் மெத்தடிஸ்ட் திருச்சபைகளுக்குள் ஒரு சீர்திருத்த இயக்கம் எழுச்சி பெற ஆரம்பித்தது. ஆனால் இந்த இயக்கமானது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று மெத்தடிஸ்ட் திருச்சபை தலைவர்கள் கருதினார்கள்.
ஆழ்ந்த இறை நம்பிக்கையும் வேதாகம அறிவும் கொண்ட கேத்தரீன், திருச்சபைகளில் சீர்திருத்தத்தை கொண்டு வர முயற்சிப்பவர்களுக்கு ஆதரவாக பேசவும் எழுதவும் ஆரம்பித்தார். இந்நிலையில் 1850 இல் மெதடிஸ்ட் சீர்திருத்தவாதிகளை கண்டித்து பேசுமாறும் எழுதுமாறும் மெத்தடிஸ்ட் திருச்சபை தலைவர்கள் கேத்தரினுக்கு நெருக்கடி கொடுத்தார்கள். இதற்கு கேத்தரீன் மறுத்ததால், வெஸ்லியன் மெதடிஸ்டு திருச்சபையில் இருந்து வெளியேற்றப்பட்டார். இவரோடு பல சீர்திருத்தவாதிகளும் திருச்சபையில் இருந்து நீக்கப்பட்டார்கள்.
கேத்தரீன் திருமணம்: வில்லியம் பூத் என்பவர் இங்கிலாந்தில் ஒரு மெதடிஸ்ட் திருச்சபையில் இளம் போதகராக பணியாற்றிக்கொண்டு இருந்தார். இவருடைய போதனைகளில் நாம் அநீதியின் சங்கிலிகளை அறுத்து எறிய வேண்டும், அடிமையாக்கப்பட்டவர்கள் விடுதலையாக்கப்பட வேண்டும், மனமுடைந்தவர்களை தேற்ற வேண்டும், ஒடுக்கப்பட்டவர்கள் தேற்றப்பட வேண்டும், நம்மிடம் இருக்கும் உணவையும், உடைகளையும், பொருட்களையும் தேவையோடு இருப்பவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்று புரட்சிகரமான போதனைகளை போதித்து சமூக மேம்பாட்டிற்காக அறைகூவல் விடுத்து வந்தார். ஒருமுறை கேத்தரீன் பங்குபெறும் வால்வொர்த் சிற்றாலயத்தில் (Walworth Chapel) 7, ஏப்ரல் 1852 இல் வில்லியம் பூத் பிரசங்கிக்க வந்திருந்தார். அப்போது வில்லியம் பூத் போதனையில் ஈர்க்கப்பட்ட கேத்தரீன், "இந்த திருச்சபையில் இதுவரை நான் கேட்ட செய்திகளில் இது மிகச் சிறந்த ஒன்று அவரிடம் தைரியமாக கூறி திருச்சபையின் மறுமலர்ச்சி குறித்து தன்னுடைய பாரத்தை பகிர்ந்து கொண்டார். இது அவர்களின் உறவின் தொடக்கமாகும்.
இந்நிலையில் சுமார் 3 ஆண்டுகளாக கடிதங்கள் மூலமாக திருச்சபை மறுமலர்ச்சி அடைய செய்ய வேண்டிய காரியங்களை கடிதங்கள் மூலமாக ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டார்கள். இறுதியில் இருவருடைய எண்ணங்களும் ஒன்றித்துபோகவே 1855 ஆம் ஆண்டு ஜூன் 16 ஆம் தேதி லண்டனில் உள்ள ஸ்டாக்வெல் கிரீன் திருச்சபையில் (Stockwell Green Congregational Church) வில்லியம் பூத் மற்றும் கேத்தரீன் திருமணம் செய்து கொண்டனர்.
குடும்பமாக ஊழியம்: வில்லியம் பூத் மற்றும் கேத்தரின் பூத் இருவரும் பொது வாழ்க்கையில் கிறிஸ்தவ ஊழியத்தில் சவால் நிறைந்த பணிகளை செய்துவந்தார்கள். இவர்கள் மெதடிஸ்ட் திருச்சபையின் விழுமியங்களைப் பகிர்ந்து கொண்டு, இன்னும் இரட்சிக்கப்படாதவர்களையும், சமூகத்தால் புறக்கணிக்கப் பட்டவர்களையும், கிறிஸ்தவர்களாக இருந்தும் திருச்சபைக்கு வராதவர்களை தேடிச்சென்று கிறிஸ்துவின் நற்செய்தியை பகிர்ந்துகொண்டார்கள்.
திருச்சபையில் பெண்கள் வேதத்தை போதிக்கலாமா? திருச்சபையின் எண்ணிக்கையில் சுமார் 50% இருக்கும் பெண்களின் பங்களிப்பினால் திருச்சபையில் எழுப்புதலும், மறுமலர்ச்சியும், சமூக முன்னேற்றமும், ஆண், பெண் இடைவெளியும் குறையும் என்று கேத்தரீன் உறுதியாக நம்பினார். எப்படியெனில் திருச்சபை ஆராதனைகளில் பெண்கள்தான் அதிக அளவில் கலந்து கொள்பவர்களாகவும் பக்தி மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றில் நிறைந்திருப்பவர்களாகவும் இருந்தவர்களாக இருந்தார்கள். ஆனால் வில்லியம் பூத், பெண்கள் திருச்சபையில் போதிப்பதையும் பெண்கள் தலைமைத்துவத்திற்கு வருவதையும் விரும்பவில்லை. ஏனெனில் காலம் காலமாக ஆணாதிக்கம் நிறைந்த திருச்சபையானது வேதவசனங்களுக்கு தவறான வியாக்கியானம் கொடுத்து பெண்களை ஆண்களுக்கு அடிமைபடுத்திக்கொண்டே இருந்தது.
வில்லியம் பூத்தின் எதிர்ப்பு மற்றும் ஆதரவின்மை ஆகியவை கேத்தரீன் அவர்களுடைய வாதங்களை மேலும் கூர்மைபடுத்தவும், வேதாகமத்தை இன்னும் ஆழமாக தியானிக்கவும் தூண்டியது. இந்நிலையில் ஆண், பெண் சமத்துவத்தை ஆதரிக்கும் வேதாக விளக்கத்தை கேத்தரீன் நன்கு பயன்படுத்தி, பெண்கள் திருச்சபையில் போதிக்க அனுமதி மறுப்பது என்பது கடவுளின் கட்டளைகளுக்கு எதிரானது என்றும் பெண்களுக்கு இழைக்கப்படும் துரோகம் என்றும் சிறந்தமுறையில் வில்லியம் பூத்திடம் எதிர்வாதம் வைத்தார்.
சூழ்நிலைகள் சாதகமானது: கேத்தரின், தைரியம் கொண்டவராக ஆற்றல்மிக்கவராக, சிறப்பான பேச்சாளராக, திறமைமிக்கவராக இருந்தார். இவர் ஒரு மெதடிஸ்ட் திருச்சபையின் போதகருடைய மனைவியாக இருந்தாலும் அவர் சார்ந்த திருச்சபையில் போதகம் செய்ய, அவருடைய கணவரான வில்லியம் பூத் அனுமதிக்கவில்லை. இந்நிலையில் 1860 ஆம் ஆண்டு பெந்தேகோஸ்தே ஞாயிறு (Pentecost Sunday) அன்று வில்லியம் பூத், பிரசங்கத்தை முடித்துக்கொண்டு கீழே வரும்போது அங்கு ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இருந்து கொண்டு இருக்கும்போது கேத்தரீன் பேசும்படி எழும்பி நின்று நான் ஒரு வார்த்தை சொல்ல விரும்புகிறேன் என்று திடீரென்று அறிவித்தபோது, எல்லோரையும் போலவே ஆச்சரியபட்ட வில்லியம் பூத், உடனே சுதாரித்துக்கொண்டு இன்றய மாலை ஆராதனையில் கேத்தரீன் பிரசங்கிக்க போவதாக அறிவித்துவிட்டார்.
அன்று மாலையில், ஒரு பெண் பிரசங்கம் செய்யப்போகின்றார் என்ற செய்தியானது அநேகருடைய ஆர்வத்தை தூண்டியதால் பலர் ஆலயத்திற்கு வந்திருந்தார்கள். அப்போது கேத்தரீன் செய்த பிரசங்கமானது அநேகரை ஆச்சரியத்தின் உச்சகட்டத்திற்கே கொண்டுசென்று, கடவுளுடைய வார்த்தைக்கு கீழ்படிய அறைகூவல் விடுத்ததாக இருந்தது. பெண்களுக்கு சமூக உரிமைகள் குறைவாக கொடுக்கப்பட்டிருந்த காலகட்டத்தில், திருச்சபையில் பெண்களுக்கு பிரசங்கம் செய்ய வாய்ப்புகள் மறுக்கப்பட்ட காலத்தில், கேத்தரீனின் பிரசங்கம் என்பது ஒரு அபூர்வ நிகழ்வாக இருந்தது. கேத்தரீனின் பிரசங்கத்தை கேட்ட வில்லியம் பூத், இனி பெண்கள் திருச்சபையில் தாராளமாக போதிக்கலாம் என்று சிந்திக்கும் நிலைக்கு வந்தார்.
பெண்ணீயத்தின் குரல் (Feminist Voice): அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு? என்ற கேள்விகள் ஆண்களால் கேட்கப்பட்ட காலத்தில் கேத்தரீன் பொங்கியெழுந்தார். கிறிஸ்தவ திருச்சபைகள், ஆண்களுக்கும் பெண்களுக்கும் விடுதலை நற்செய்தியை அறிவித்துக்கொண்டு இருக்கும்போது பெண்களிடம் இருக்கும் பன்முக ஊழிய தாலந்துகளை வெளிப்படுத்துவதை திருச்சபையானது தடுப்பது நியாயமான செயலா? என்று எதிர் கேள்விகள் எழுப்பி எல்லோரையும் சிந்திக்க வைத்தார்.
அறிவுரீதியாக பெண்கள், ஆண்ளுக்கு சமமானவர்கள் என்று கேத்தரீன் உறுதியாக நம்பினார். ஆனால் பெண்களுக்கு போதிய பயிற்சி கொடுக்காததினாலும் சரியான வாய்ப்புகளை வழங்காததினாலும் பெண்கள் தாழ்ந்தநிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்கள் என்று குமுறினார்.
மேலும் திருச்சபையில் பெண்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று கூறிய பவுலின் வாசங்கள் (I கொரி 14:34) தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, தவறான விளக்கம் கொடுக்கப்பட்டதால் திருச்சபைக்கு நஷ்டம், உலகத்திற்கு தீமை மற்றும் கடவுளுக்கு அவமதிப்பு என்று திருச்சபையின் ஆணாதிக்கத்திற்கு எதிர்த்து குரல் கொடுத்து, பெண்களுக்கு திருச்சபையில் பிரசங்கிக்கும் உரிமை உண்டு என்றும் கேத்தரின் உறுதியாக எடுத்துரைத்தார்.
திருச்சபை ஊழியத்தில் பெண்களின் பங்கு: கடவுளுக்கு முன்பாக ஆண்கள் மற்றும் பெண்கள் எல்லோரும் சமம் என்றும், பெண்களும் ஆண்களைப்போலவே கடவுளின் சாயலில் படைக்கப்பட்டவர்கள் என்றும் கேத்தரின் (ஆதி. 1:27) பிரசங்கம் பண்ணிணார். திருச்சபையில் பெண்களின் பங்கு பற்றிய தனது கருத்துக்களை, அப்போஸ்தலனாகிய பவுல் கலாத்தியர்களுக்கு எழுதிய நிருபத்திலிருந்து (3:28) மேற்கோள் கான்பித்து, மக்களை சிந்திக்க வைத்தார். இதன்பது கிறிஸ்து இயேசுவுக்குள் ஆண் என்றும் இல்லை; பெண் என்றும் இல்லை. ஏனெனில் எல்லோரும் கிறிஸ்துவுக்குள் சமம் தான். ஆகவே பெண்களுக்கு திருச்சபையில் போதிக்கும் வாய்ப்புகளையும் தலைமைத்துவத்திற்கும் தகுதியானவர்கள் என்று இறையியல் பண்டிதர்களையே மாற்றி யோசிக்க வைத்தார்.
அப்படியே மனுக்குலம் பாவத்தில் வீழ்ச்சி அடைந்தபோது (ஆதி 3), உண்டான பாவத்தின் விளைவாக பெண்கள், ஆண்களுக்கு அடிமைகளாகிப்போனார்கள் (ஆதி 3:16) என்பதை ஏற்றுக்கொண்ட கேத்தரீன், ஆனால் பெண்களை அங்கேயே விட்டுவிடுடாமல் இயேசு கிறிஸ்து கல்வாரியில் சிந்திய இரத்ததினாலும், கடவுளின் கிருபையினாலும் பாவத்திலிருந்து மீட்டெடுக்கப்பட்டுவிட்டார்கள். இப்போது கிறிஸ்துவுக்குள் எல்லா பெண்களும் ஆண்களுக்கு சமம்தான். இதை திருச்சபையானது நிராகரிப்பது எந்தவிதத்திலும் சரியல்ல என்று ஆணித்தரமாக சுட்டிக்கான்பித்தார்.
பெண்கள் திருச்சபையில் பிரசங்கிப்பதை கடவுளுடைய வார்த்தை தடை செய்யுமாயின் கடவுளுக்கு மிகவும் அர்ப்பணிப்புடன் பணிபுரியும் பல பெண்கள் பரிசுத்த ஆவியானவரால் வழிநடத்தப்டுவதை வேதத்தில் பார்க்கின்றோம். ஆகவே கடவுளுடைய வார்த்தையும் பரிசுத்த ஆவியானவரும் ஒருவருக்கொருவர் முரண்பட முடியாது என்று முழங்கினார். எப்படியெனில் திருச்சபையில் பெண்கள் பிரசங்கம் செய்வதற்கு வேதாகமம் தடையில்லை என்றும் வேதாகமத்தை பன்படுத்தும் ஆண்கள் தான் தடையாக இருக்கின்றார்கள் என்று விளக்கினார். இவருடைய வேதபூர்வமான போதனைகளும் எழுத்துக்களையும் கிறிஸ்தவ உலகமே அதிசயமாய் பார்த்தது.
பெண்களுக்கு ஆதரவு: தனது கணவர் வில்லியம் பூத் கொடுத்த ஊக்கத்தினால், கேத்தரீன் அம்மையார் 1859 ஆம் ஆண்டு *பெண்கள் ஊழியம் (Feminist Ministry)* என்ற புத்தகத்தில் பெண்கள் திருச்சபையில் பிரசங்கம் செய்ய உரிமை உண்டு என்று எழுதினார். இந்த புத்தகமானது தன்னைப்போலவே பெண்களும் திருச்சபையில் பிரசங்கம் செய்யலாம் என்று குரல் கொடுத்த அமெரிக்க பெண்மணி திருமதி. ஃபோப் பால்மர் என்பவருக்கு ஆதரவாக இருந்தது.
இந்த புத்தகத்தில் கேத்தரீன் எழுத்துக்கள் மூன்று முக்கிய கொள்கைகளை வலியுறுத்தியது. முதலில், பெண்கள் ஆண்களை விட இயற்கையாகவோ அல்லது ஒழுக்க ரீதியிலோ தாழ்ந்தவர்கள் அல்ல என்பதை வலியுறுத்தியது. இரண்டாவதாக, பெண்கள் ஊழியம் செய்வதற்கு மறுப்பு தெரிவிக்க வேதாகம பூர்வமாக எந்த ஒரு காரணமும் இல்லை என்று உறுதியாக நம்பினார்கள். மூன்றாவதாக, வேதாகமம் வற்புறுத்துவதை, பரிசுத்த ஆவியானவர் ஆசீர்வதித்துள்ளார். ஆகவே பெண்களுக்கு திருச்சபையில் சம வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கேத்தரின் எழுத்து பணிகள்: பெண்களின் ஆன்மீகப் புரிதலை இழிவுபடுத்தி, மட்டுபடுத்திய ஒரு உள்ளூர் போதகருக்கு மறுப்பு தெரிவித்து கேத்தரின் தனது எழுத்து பணியை தொடங்கினார். இவையே பிற்காலத்தில் பல புத்தகளை எழுத அடித்தளமாக இருந்தது. அவை Paper on Practical Religion (1879), Aggressive Christianity (1881), Godliness (1882), Life and Death (1883), The Salvation Army in Relation to the Church and State (1883) மற்றும் Popular Christianity (1883) ஆகியவை முக்கியமானவைகள் ஆகும். கேத்தரின் அம்மையார் இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஆண்களைப் போலவே பெண்களும் திருச்சபையில் பிரசங்கிக்கும் உரிமைக்காக குரல் கொடுத்து வந்தார்.
இரட்சண்ய சேனை (Salvation Army) உருவாக்கம்: வில்லியம் பூத் மற்றும் கேத்தரின் பூத் இருவரும் திருச்சபைகளில் எழுப்புதல் தீ பற்றியெரிந்து மறுமலர்ச்சி ஏற்பட, தங்களை சுவிசேஷகர்களாக அற்பணித்துக்கொண்டு, மெத்தடிஸ்ட் திருச்சபையில் இருந்து விலகி, நற்செய்தி பணியாளர்களாக பணியாற்றிக்கொண்டு இருந்தார்கள். இதற்காக 1865 இல் வில்லியம் பூத் லண்டன் நகரில் கிறிஸ்டியன் மிஷன் (The Christian Mission) என்ற இயக்கத்தை ஆரம்பித்தார். இந்த ஊழியம் கடும் சவாலாக இருந்தது. எப்படியெனில் இந்த நேரத்தில் வில்லியம் பூத்க்கு நிரந்தரமான பண உதவிகள் என்று எதுவும் இல்லை, திருச்சபைகளில் போதிக்கும் வாய்ப்புகளும் குறைவாகவே கிடைத்தன. கேத்தரீன் அம்மையார்தான் மேற்கு லண்டன் மற்றும் பிற இடங்களுக்கு சென்று பிரசங்கங்கள் செய்து, தான் எழுதிய புத்தகங்களை விற்று குடும்பத்தின் தேவைகளை சந்தித்துவந்தார்.
கேத்தரீன் அம்மையாரின் பிரசங்கங்கள் எளிமையாகவும் வல்லமை நிறைந்ததாகவும் இருந்ததினால் அநேக மக்களை கிறிஸ்துவுக்கு நேராக வழிநடத்தியது. இவ்விருவரும் லண்டன் மற்றும் அண்டைய பகுதிகளுக்கும், பிற நகரங்களுக்கும் கடந்து சென்று துன்பப்படும் மக்களோடு துனைநின்று, அவர்களது வேதனைகளில் ஆறுதல் படுத்தியும், திருச்சபையிலிருந்து ஒதுங்கி நின்றவர்களை கரிசனையாய் விசாரித்தும், சமுதாயத்தால் இழிவாக கருதப்பட்டவர்களை தேடிச்சென்று தங்கள் அன்பை கான்பித்தார்கள்.
மதுபானத்திற்கு அடிமையானவர்களின் வீடுகளில் உள்ளவர்களுக்கு நல்ல ஆலோசனை வழங்கி, புதிய விசுவாசிகளின் நம்பிக்கையை பலப்படுத்துவதற்காக, அவர்கள் வீடுகளில் ஜெபக்கூட்டமும் நடத்தினார்கள். வில்லியம் பூத் மற்றும் கேத்தரீன் பூத் ஆரம்பித்த இயக்கமானது சூதாட்டக்காரர்கள், திருடர்கள், குடிகாரர்கள், ஏமாற்றுகாரர்கள், போதை வஸ்துகளுக்கு அடிமையானவர்கள், பாலியல் தொழில் செய்பவர்கள், மற்றும் கிறிஸ்தவ சமூகத்தில் விரும்பத்தகாதவர்கள் என்று முத்திரை குத்தப்பட்டவர்கள் ஆகியோர் மத்தியில் சுவிசேஷபணி செய்து வந்தார்கள்.
இந்நிலையில் ஒரு சில மாதங்களுக்குள், சுமார் 3,000 பேர் இந்த இயக்கத்தில் தங்களை இணைத்துக்கொண்டார்கள். 1867 ஆம் ஆண்டில், இந்த இயக்கத்தில் 10 முழுநேர பணியாளர்கள் மட்டுமே இருந்த சூழ்நிலையில் , 1874 ஆம் ஆண்டில் 1,000 பேர் தன்னார்வலர்களாகவும், 42 பேர் முழுநேர சுவிசேஷகர்களாகவும் கிறிஸ்டியன் மிஷன் (The Christian Mission) என்ற பெயரில் செயல் பட்டு வந்தார்கள்.
இந்த இயக்க ஆதரவாளர்கள் எல்லோரும் வில்லியம் பூத்தை ஜெனரல் (General) என்றே அழைத்து வந்தார்கள். இந்நிலையில் 1878 ஆண்டு இந்த இயக்கம் பற்றிய செய்திகளை அச்சுப்பொறியில் ஏற்றும்போது கிறிஸ்டியன் மிஷன் தன்னார்வ சேனை (The Christian Mission Volunteer Army) என்று இருந்ததை கவனித்து, அதில் தன்னார்வ சேனை என்ற வார்த்தைக்கு பதிலாக இரட்சண்ய சேனை (Salvation Army) என்று திருத்தம் செய்தார். இந்த தலைப்பு எல்லோருக்கும் பிடித்துப்போகவே The Christian Mission என்ற இயக்கமானது The Salvation Army என்று பெயர்மாற்றம் அடைந்தது. இதிலிருந்து இந்த இயக்கத்தில் சேரும் விசுவாசிகள் கிறிஸ்துவின் சேனை வீரர்கள் என்று அழைக்கபடலானார்கள்.
இரட்சண்ய சேனையில் பெண்கள் (Women in Salvation Army): கேத்தரின் பூத் தனது கணவர் வில்லியம் பூத்துடன் இணைந்து The Salvation Army என்ற ஸ்தாபனத்தின் இணை நிறுவனராக இருந்தார். கேத்தரீன் அம்மையார் தான் இந்த புதிய ஸ்தாபனத்தின் கொடியை வடிவமைப்பு செய்து, ஊழியர்களுக்கான அதிகார பிரிவுகள்(Ranks) ஏற்படுத்தி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சீருடைகள் வடிவமைத்தார்கள். இந்த ஸ்தாபனத்தில் பணிபுரியும் போதகர்கள் இராணுவத்தில் இருக்கும் அதிகார பிரிவு போல ஜெனரல், லெப்டினன்ட், பிரிகேடியர், கர்னல், மற்றும் கேப்டன் என்று அழைக்கப்பட்டார்கள்.
இரட்சண்ய சேனையின் கோட்பாடுகள்: ஒரு மனிதனின் ஆத்துமா இரட்சிப்பு அடைவதற்கு சாக்கிரமெந்து என்ற ஞானஸ்நானம் மற்றும் திருவிருந்து ஆகியவை அவசியமில்லை என்று கேத்தரின் நம்பினார். மற்றபடி இரட்சண்ய சேனை திருச்சபை கோட்பாடுகள் பெரும்பாலானவை சீர்திருத்த திருச்சபையின் அடிப்படை கோட்பாடுகளைத்தான் பின்பற்றுகின்றார்கள்.
அல்லேலுயா லஸ்ஸிஸ் (Hallelujah Lassies): சால்வேஷன் ஆர்மி(இரட்சண்ய சேனை) ஸ்தாபனமானது ஆரம்பத்திலிருந்தே, திருச்சபை ஊழியத்தில் பெண்களின் சேவையை ஏற்றுக்கொண்டது. திருச்சபைக்குள் புதிய விசுவாசிகளை கொண்டுவர பெண்கள் ஒரு முக்கிய கருவிகளாக இருப்பார்கள் என்று கேத்தரீன் அம்மையார் நம்பினார்கள். ஆகவே திருச்சபை பணிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்ய பெண்களை தேர்வு செய்ய ஊழிய ஆர்வமும் வேலை செய்யும் மனப்பான்மை கொண்ட பெண்களை தேர்ந்தெடுத்தார். இவர்கள் அல்லேலுயா லஸ்ஸீஸ் என்று அழைக்கப்பட்டார்கள்.
இந்த பெண்கள் சமூகத்தால் ஒதுக்கப்பட்டு, சேரிகளில் குடியிருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் சேவைசெய்து அவர்களுக்கு சமூக பாதுகாப்பு கிடைக்கும்படி செய்தார். ஊழியத்தில் ஆண் பெண் பாலின சமத்துவம் கடைபிடிக்கப்பட்டதால் ஆண்களுக்கு நிகராக பெண்களும் சம உரிமைகளை பெற்றிருந்தார்கள். 1878 இல், இருந்த திருச்சபை ஊழியங்களில் இருந்த 91 பேர்களில் 41 பேர் பெண்களாக இருந்தார்கள். வில்லியம் பூத் தனது புத்தகத்தில் குறிப்பிடும்போது எனது இராணுவத்தின் சிறந்த ஆண்கள், பெண்களாக இருந்தார்கள் என்று எழுதியுள்ளார்.
திருச்சபை ஊழியத்தில் பெண்களுக்கு எதிர்ப்பு: ஆங்கிலிக்கன் திருச்சபையான சர்ச் ஆஃப் இங்கிலாந்து (Church of England) முதன் முதலில் சால்வேஷன் ஆர்மி ஸ்தாபனத்தின்மீது கடும் வெறுப்பை கான்பித்தது. எப்படியெனில் இங்கிலாந்தின் முன்னணி அரசியல்வாதியும் சுவிசேஷகருமான லார்ட் ஷாஃப்ட்ஸ்பரி (Lord Shaftesbury) என்பவர் வில்லியம் பூத்தை அந்தி-கிறிஸ்து என்று வர்ணித்தார். இதற்கு முக்கியமான புகார்களில் ஒன்று, திருச்சபையில், பெண்களை ஆண்களின் நிலைக்கு உயர்த்தியது ஆகும்.
இதற்காக சால்வேஷன் ஆர்மியின் தன்னார்வத் தொண்டர்கள் அடிக்கடி துன்புறுத்தப்பட்டார்கள். பல சமயங்களில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பொது இடங்களில் தாக்கப்பட்டார்கள். சால்வேஷன் ஆர்மி தன்னார்வ தொண்டர்கள் வீதிகளில் இசைக்கருவிகளுடன் பாடல்களை பாடிக்கொண்டு மக்களை தங்கள் வெளிப்புற கூடாரக் கூட்டங்களுக்கு அழைக்கும்போது இங்கிலாந்தின் பல பகுதிகளில் தாக்குதலுக்கு உள்ளானார்கள். பல நேரங்களில் சமூக விரோத கும்பல்கள் இவர்களை கிண்டல் செய்து, அறுவருப்பான வார்த்தைகளை பேசி மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தினார்கள். இப்படிப்பட்ட வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் மத்தியிலும் 1881 மற்றும் 1885 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 2,50,000 மக்கள் சால்வேஷன் ஆர்மி திருச்சபைகளில் அங்கத்தினர்களாக சேர்ந்தார்கள்.
கேத்தரீன் அம்மையாரின் சமூகப் பணிகள்: கேத்தரின் அம்மையாரின் முக்கியமான நோக்கமானது பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களை மீட்டெடுத்து அவர்களின் மறுவாழ்விற்காக அரசாங்கத்தின் கதவை தட்டினார். இங்கிலாந்து தேசத்தில் துணி நெய்யும் நிருவனங்களில், பணி புரியும் பெண்களுக்கு ஆண்களைவிட மிகக்குறைவாகவே ஊதியம் வழங்கப்படும் நிலையைக்கண்டு மனம் வெதும்பினார். இவர்களின் சம்பள உயர்விற்க்காக அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும்படி பல போராட்டங்களை நடத்தினார்.
குடிகார தந்தையால் வழிநடத்தப்படும் குடும்பத்தில் உள்ள பிள்ளைகளை ஆதரிப்பதற்காக மக்களின் உதவிகேட்டி மன்றாடினார். குடிபழக்கத்துக்கு அடிமையான மக்களின் வீடுகளுக்கு சென்று, அவர்களுக்கு நல்ல ஆலோசனைகள் வழங்கி, அவர்களை மனந்திருந்த செய்தார். பாலியல் தொழில் செய்பவர்கள், குற்றமிழைத்த பெண்கள், குடிகாரர்கள் மற்றும் வீடற்றவர்களின் சூழ்நிலைகளைக் கண்டு, ஏழைகள் மலிவான விலையில் உணவை வாங்கக்கூடிய அளவிற்கு உணவு விடுதியாளர்களிடம்பேசி பல கடைகள் திறந்து ஏழைமக்களுக்கு உதவி செய்தார். இவரது ஊழியம் பலரை ஈர்த்ததினால் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், ஆதரவற்ற நிலையில் இருக்கும் குடிசைவாசிகளின் மேம்பாட்டிற்கு என்று தாராளமாக உதவி செய்தார்கள். குழந்தை விபச்சாரத்திற்கு எதிராக இளம் பெண்களைப் பாதுகாப்பதற்காக இங்கிலாந்து ராணியான விக்டோரியாவை சந்தித்து வேண்டிக்கொண்டதினால் 1885 இல் இங்கிலாந்து அரசாங்கத்தால் இளம் பெண்கள் பாதுகாப்பிற்கான பாராளுமன்ற மசோதா நிறைவேற்றப்பட்டது.
வெளிநாடுகளில் சால்வேஷன் ஆர்மி: சால்வேஷன் ஆர்மி திருச்சபைகளின் வளர்ச்சியானது இங்கிலாந்து மீழுவதும் வேகமாக பரவி, பின்னர் சர்வதேச அளவில் விரிவடைந்தது. இதற்காக கேத்தரின் தம்பதியினர் தங்கள் எட்டு பிள்ளைகளையும் ஊழியத்திற்கு அனுப்பி வைத்தார். இவர்களில் பிராம்வெல் மற்றும் எவாஞ்சலின் ஆகியோர் தி சால்வேஷன் ஆர்மியின் ஜெனரல்கள் ஆனார்கள். அப்படியே கேட் பூத் என்ற மகள் பிரான்சு நாட்டிற்கு முதல் மிஷனரியாக சென்றார். பின்னர் சுவிட்சர்லாந்திலும் சால்வேஷன் ஆர்மி திருச்சபைகள் நிறுவப்பட முன்னோடியாய் இருந்தார். கேத்தரீன் அம்மையார் அமெரிக்காவில் சால்வேஷன் ஆர்மியின் பணியை தொடங்க முடிவு செய்தபோது, ஏழு பெண்களைக் கொண்ட ஸ்பிளெண்டிட் செவன் (Splendid Seven) குழு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் ஐரோப்பிய நாடுகள் எங்கும் பரவியது.
கேத்தரீன் அம்மையாரின் மரணம்: அறுபது வயதை கடந்த கேத்தரீன் அம்மையாரை கடுமையான புற்றுநோய் வாட்டிவதைக்க ஆரம்பித்ததில் வில்லியம் பூத் நொறுங்கி போய்விட்டார். ஏனெனில் கேத்தரீன் தான் அவரது ஆலோசனை அதிகாரியாகவும், சால்வேஷன் ஆர்மி ஸ்தாபனத்தின் வலது கையாகவும் இருந்து கொண்டு இருந்தார். திறமையான பேச்சாற்றல் மற்றும் கூர்மையான அறிவுத்திறன் கொண்ட வாழ்க்கை துணையை இழக்கபோகிறோம் என்ற சிந்தனை வாட்டியெடுத்தது.
சால்வேஷன் ஆர்மி யின் இருபத்தைந்தாவது ஆண்டு விழாவில் அம்மையாரால் கலந்து கொள்ள முடியாததினால் தன்னுடைய செய்தியை ஒரு கடிதத்தில் தெரிவித்திருந்தார்கள். அதில்: “என் அன்பான குழந்தைகளே மற்றும் நண்பர்களே, என் இடம் காலியாக உள்ளது, ஆனால் என் இதயம் உங்களிடம் இருக்கிறது. நீங்கள் தான் என்னுடைய மகிழ்ச்சி மற்றும் கிரீடம். இந்த இருபத்தைந்து ஆண்டுகளாக உங்கள் பாடுகள், துன்பங்கள் மற்றும் வெற்றிகள் என் வாழ்வின் முக்கிய பக்கபலமாக இருந்தது. நான் இரட்சண்ய சேனை கொடியின் கீழ் இறந்து கொண்டிருக்கிறேன், ஆனால் இதன் கீழ் நின்று இனி நீங்கள் வாழ்வதும், போராடுவதும், உங்களுடையது. இந்த வாழ்க்கை புயலில் கடவுள் எனக்கு இரட்சிப்பும் அடைக்கலமுமாக இருந்துகொண்டு இருக்கின்றார். நான் உங்களுக்கு என் அன்பையும் ஆசீர்வாதத்தையும் விட்டுச்செல்கின்றேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் அக்டோபர் 4, 1890 இல், கேத்தரின் பூத், தனது 61 வயதில், தனது கணவர் வில்லியம் பூத் கரங்களில் முத்தமிட்டு தன்னைச் சுற்றியிருந்த சால்வேஷன் ஆர்மி குடும்பத்தாரை ஏரெடுத்துப்பார்த்து, ஒரு புன்னகையை உதிர்த்துவிட்டு, தன் கண்களை மூடிக்கொண்டார். இதன் பின் அம்மையார் கண் திறக்கவே இல்லை. கேத்தரீன் அம்மையாரின் சரீரம் ஒரு கண்ணாடி சவப்பெட்டியில் வைக்கப்பட்டு, இருந்தது கிட்டத்தட்ட 40,000 பேர் பார்த்து இறுதி மரியாதை செலுத்தி கண்ணீரோடு பிரியாவிடை பெற்றுக்கொண்டார்கள்.
கேத்தரீன் அம்மையாரின் புகழ்: கேத்தரின் பூத் அம்மையார், திருச்சபை மற்றும் சமூக சீர்திருத்தவாதியாக இருந்து, தனக்கு தெரிந்த உண்மையைப் தைரீயமாக பேசத் துணிந்தவர். அம்மையார் தன் இதயத்தால் சமுதாயத்தில் இழிவாக கருதப்பட்டவர்கள் மனப்பூர்வமாக நேசித்தார்கள், அவர்களை தன் கைகளால் அனைத்துக்கொண்டார். திருச்சபையாலும் சமூகத்தாலும் புறக்கணிக்கப்பட்ட ஏழைகள், பெண்கள் மற்றும் ஆதரவற்றோர் மத்தியில் சமூகப் பணி, பெண்கள் மறுவாழ்வு, மதுவிலக்கு, பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு சட்டம், போன்ற பல்வேறு விஷயங்களில் உறுதியான போராட்டங்களை முன்னெடுத்தவர்.
திருச்சபை ஊழியத்தில் ஆண்களுடன் பெண்களுக்கும் முழு சமத்துவம் இருக்க வேண்டும் என்று கடைசி மூச்சு நிற்க்கும்வரை போராடினார். கேத்தரின் அம்மையார் வாழ்ந்த காலத்தில், அவரது கணவர் வில்லியம் பூத் உட்பட எவரும் அம்மையாரைப்போல சமுதாய புகழின் உச்சத்தையோ அல்லது ஆன்மிக நிலையின் உச்சத்தையோ தொடமுடியவில்லை என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். சால்வேஷன் ஆர்மியின் தாய் என்று அழைக்கப்படும் கேத்தரின் பூத் அம்மையார் இங்கிலாந்து ராணி விக்டோரியா சகாப்தத்தின் மிகவும் அசாதாரணமான பெண்களில் ஒருவர் என்று சரித்திரம் இன்றும் பேசிக்கொண்டு இருக்கிறது.
இந்த 21 ஆம் நூற்றாண்டில் சால்வேஷன் ஆர்மி (இரட்சண்ய சேனை) ஸ்தாபனமானது 130 க்கும் மேற்பட்ட நாடுகளில் 30 இலட்சம் அங்கத்தினர்களோடு நற்செய்திபணியை பிரசங்கித்து கொண்டு திருச்சபைகளை நாட்டிக்கொண்டு இருக்கிறது. மேலும் ஆயிரக்கணக்கான சுவிசேஷ மையங்கள், சமூக நல நிறுவனங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் பிற சமூக சேவைகளையும் சால்வேஷன் ஆர்மியின் சர்வதேச தலைமையகமான லண்டனில் இருந்து நடத்திக்கொண்டு இருக்கிறது என்பது குறிப்பிடதக்கதாகும். இதற்கு அஸ்திபாரம் போட்டது கேத்தரீன் பூத் அம்மையார் ஆவார்.
இதை வாசிக்கிற அன்பு சகோதரிகளே, நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கிக்கொண்டு இருந்தபோது, எல்லா ஆண்களும் அவரைவிட்டுவிட்டு ஓடிப்போனார்கள். ஆகவே உயித்தெழுந்த இயேசு கிறிஸ்து முதன் முதலில் ஆண்களுக்கு தன்னை வெளிப்படுத்தாமல், ஒரு பெண்ணுக்கு தம்மை வெளிப்படுத்தி, அவள் மூலமாக கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் செய்தி ஆண்களுக்கும் மற்ற எல்லோருக்கும் அறிவிக்கப்பட்டது. இயேசுவானவர் தன்னை முதன் முதலில் மேசியா என்று ஒரு பெண்ணுக்குத்தான் வெளிப்படுத்தினார். ஆதி திருச்சபையில் முதல் 500 ஆண்டுகளுக்குள் பல பெண்கள் இறையியலாளர்களாக (Theologians), சுவிசேஷகர்களாக (Evangelists), அப்போஸ்தலர்களாக (Apostles), தீர்க்கதரிசிகளாக (Prophetess), உதவி ஆயர்களாக (Deaconess), ஆயர்களாக (Presbyters) மற்றும் பேராயர்களாக (Bishops) கிறிஸ்துவுக்கு சிறந்த சேனாதிபதிகளாக தங்களை அற்பணித்து எங்கோ ஒரு மூலையில் எருசலேமுக்குள் இருந்த கிறிஸ்தவத்தை உலக மதமாக மாற்றினார்கள். இதில் பெண்களின் பங்கு மகத்தானது, அளவிடப்பபட முடியாது.
பிற்காலத்தில் கிபி 5 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவம், ரோமானிய மதமாக அங்கிகரிக்கப்பட்டதால், ஆணாதிக்கம் நிறைந்த ரோம கலாச்சாரம் கிறிஸ் தவத்தில் ஊடுருவி, 1 கொரி 14:34-36, 1 தீமோ 2:11-15, 1 கொரி 11:3, எபே 5: 22-24 ஆகிய வசனங்களுக்கு தவறான வியாக்கியானங்களை கொடுத்து திருச்சபையில் 50% இருக்கும் பெண்களையும், பெண்களின் திறமைகளையும் வெளியே கொண்டுவரவிடாமல், பெண்களின் வாயை கடந்த 1500 ஆண்டுகளாக அடைத்துவிட்டது.
21 ம் நூற்றாண்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகம் எவ்வளவோ மாறிக்கொண்டு இருக்கிறது. ஆனால் ஆணாதிக்கம் நிறைந்த இன்றைய கிறிஸ்தவ திருச்சபை தலைமைத்துவம் பெண்களை உதவி ஆயர்களாக, ஆயர்களாக மற்றும் பேராயர்களாக அங்கிகரிக்க மறுக்கிறது. கடவுளின் சாயலில் சமமாக படைக்கப்பட்ட பெண்களை ஏற்றுக்கொள்வை மறுக்கிறது. இது கடவுளுக்கு எதிர்த்து நிற்பதற்கு சமம் என்பதை உணராமல் இருக்கிறது.
ஆகவே பெண்களே, ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் கட்டிடமாகிய திருச்சபை உங்களை அங்கிகரிக்க மறுக்கலாம். ஆனால் திருச்சபை என்பது கட்டிடம் அல்ல, இது விசுவாசிகளின் கூடுகை என்பதை மறந்து போகாதேயுங்கள். இதற்கு என்று தனி கட்டிடம் தேவையில்லை. ஆகவே உங்கள் வீடுகளே திருச்சபையாக மாறட்டும். நீங்கள் படிக்கிற பள்ளிகள் மற்றும் கல்லூரி நண்பர்களின் ஐக்கியமே திருச்சபையாக மாறட்டும். நீங்கள் வேலைசெய்யும் இடங்களில் இருக்கும் நண்பர்களின் ஐக்கியமே திருச்சபையாக மாறட்டும்.
இந்தியாவில் சுமார் 6,75,982 கிராமங்கள் உண்டு. இதில் சுமார் 1,12,345 கிராமங்களில் மாத்திரம் ஆலயங்கள் இருக்கிறது. தெபோராளாகிய நீ எழும்புமளவும், இந்திய கிராமங்கள் பாழாய் போய்க்கொண்டுதான் இருக்கபோகிறது (நியா 5:7) . ஆகவே பெண்களின் வாழ்கையை ஒளியேற்றுவதற்காக தன்னையே கொடுத்த இயேசு கிறிஸ்துவுக்கு ஏதாவது வகையில் நற்செய்திபணி செய். உன் மூலமாக இயேசு கிறிஸ்துவின் இராஜியம் நீ இருக்கும் இடத்தில் கட்டப்படுவதாக. ஆமென்.
============Catherine Booth (1829-1890)==============
Early Life: Catherine was born in Derbyshire, England, on January 17, 1829, the only girl in a family of five children to Methodist parents, John Mumford and Sarah Milward. Her father was an occasional lay preacher and carriage maker but her mother imparted a strong sense of religious and moral conviction in her daughter, instilling the values of domestic piety, selflessness and the need to submit to God’s will.
School Life: From an early age, Catherine was a serious and sensitive girl. She had a strong Christian upbringing and was said to have read the Bible through eight times before the age of 12 and even went so far as to give up eating sugar because of its link to African slavery. As a teenager, Catherine loved to debate on social issues of the day with her father after dinner.
Young Age: Between the ages of fourteen to sixteen, her mind was absorbed with Christian doctrine and philosophy. She also read books about theology and church history, which was unusual for a young woman in her time. She read voraciously, especially the writings of Charles Finney and John Wesley, and she not only became assured of her own salvation but also gained a glimmer of her own calling to the public. Even as a young girl she had served as secretary of a Juvenile Temperance Society, writing articles for a temperance magazine. Catherine was a member of the local Band of Hope and became an active member of the Wesleyan Methodist Church in Brixton, London.
Role in Methodist Reform: Catherine had been active in the temperance movement and was well versed in Scripture. Within Methodism, many were expressing convictions that the Church was slipping away from its revival beginnings and was now in need of reform. A reform movement was rising up and many within the denomination viewed it as a threat to their established order. Catherine had become a woman of deep spiritual convictions and immediately sympathized with those who were trying to bring reform. She could not help but speak what she was feeling so deeply. When Catherine refused to condemn Methodist Reformers in 1850, the Wesleyan Methodists expelled her.
Marriage: William Booth, a young Methodist minister, who had strong views on the role of church ministers believed they should be "losing the chains of injustice, freeing the captive and oppressed, sharing food and home, clothing the naked, and carrying out family responsibilities." At a later date, Catherine heard William preach at Walworth Chapel. Very impressed with his message, she said that it was “One of the best I have heard in this chapel.” 7 On April 10, 1852, Catherine met William and became close immediately and this was the start of their relationship. Catherine constantly wrote letters of encouragement to William as he performed the tiring work of a preacher. They were married on 16 June 1855 at Stockwell Green Congregational Church in London.
Ministerial Life: Both William Booth and Catherine Booth, accepted the challenge of living a public life on the frontline of Christian ministry. They shared Methodist values and a passionate belief in the need for reform of the Church’s outreach to the ‘unsaved’. However, Catherine believed in the potential of female ministry as a powerful tool to reach new audiences. William was initially opposed to women preaching. His opposition served to motivate Catherine to refine her arguments. She utilized an interpretation of the Bible which supported equality and challenged the precept that it was unfeminine for women to preach. Catherine made a public defense of women in ministry.
The Door was slowly opened: Catherine was a dynamic and forceful, speaker. As the wife of Methodist minister, she herself had not preached when she wrote her defense, but the following year on Whit Sunday in 1860 as her husband William finished his sermon, she stood up in front of a crowd of more than a thousand people. Her first words when she rose to speak were, “I want to say a word…” William was as surprised as anyone, when she made her sudden announcement, but he quickly recovered, he announced that she would preach that evening.
On the evening, the people were greatly challenged by her preaching, partly intrigued by a female preacher. A woman preacher was a rare phenomenon in a world where women had few civil rights, and no place in the professions. Catherine was both a woman and a fine preacher, a magnetic combination that attracted large numbers to hear her and made its own statement about the validity of women's ministry. Her sermon was so impressive that William changed his mind about women's preachers.
Voice of Women: When people suggested that a woman's place was in the home, Catherine wondered if the Christian church, which preached a liberating gospel to both men and women, could keep women from expressing their manifold ministry gifts. She believed that intellectually woman was man's equal, but the lack of training or lack of opportunity made her sometimes inferior. She argued that nurture, not nature, was to blame and set out to change the status of women in the church through speaking engagements and self-publishing. She eventually concluded that a false interpretation of Paul's comment about women keeping silent in church (I Cor 14:34) had resulted in "loss to the church, evil to the world, and dishonor to God." However, Catherine was strongly convinced that women were not intellectually inferior to men and had the right to preach. She soon proved to be an exceptional orator and contributed significantly to moral and social reform.
Partnership in Ministry: Catherine founded her argument on the absolute equality of men and women before God (Genusis 1:27). She supported her views on the role of women in the Church with Biblical quotes from St. Paul’s Letter to the Galatians (3:28), "There is neither male nor female for ye are all one in Christ Jesus"—to support her position on the need for equality for women in the church. She acknowledged that the Fall(Gen 3) had put women into subjection, as a consequence of sin, but to leave them there, she said, was to reject the good news of the gospel, which proclaimed that the grace of Christ had restored what sin had taken away. Now all men and women were one in Christ. If the Word of God forbids female ministry, we would ask how it happens that so many of the most devoted handmaidens of the Lord have felt constrained by the Holy Ghost to exercise it … The Word and the Spirit cannot contradict each other. Catherine Booth was a convinced believer in women’s right to preach the gospel.
Catherine’s Feminist Ministry: With William's encouragement, Catherine wrote a pamphlet, ‘Female Ministry: Woman’s Right to Preach the Gospel’ (1859), in defense of American preacher Mrs. Phoebe Palmer, whose preaching had caused a great stir in the area where the Booths lived. The pamphlet identifies three major principles on which her convictions rested. First, Catherine saw that women are neither naturally nor morally inferior to men. Second, she believed there was no scriptural reason to deny them a public ministry. Third, she maintained that what the Bible urged, the Holy Spirit had ordained and blessed and so must be justified.
Academic Works of Catherine: Catherine began her writing career with a rebuttal to a local pastor who demeaned women’s spiritual understanding. Her major works include Papers on Practical Religion (London, 1879), Aggressive Christianity (1881), Godliness (1882), Life and Death (1883), The Salvation Army in Relation to the Church and State (1883), and Popular Christianity (1887). Catherine was eloquent and compelling in speech, articulate and devastatingly logical in writing; she had for over twenty years defended the right of women to preach the gospel on the same terms as men.
Formation of Salvation Army: Both William Booth and Catherine Booth broke their ties with the Methodist connection, and began working together in a revivalist ministry. William left his position as a traveling preacher to start The Christian Mission in London in 1865, but as he did not earn any money at that time, Catherine Booth became the sole bread winner for family. Catherine preached in West London and other places and also sold her pamphlets. They had worked tirelessly for the suffering souls throughout London who were not willing to attend—or even welcomed into—a traditional church in the East end of London into neighboring areas and then to other cities. With her gentle but powerful appeal, she won many people for Christ. She also used to counsel alcoholics at their homes and conducted cottage meetings to strengthen new believers in their faith.
Their organization initially worked with alcoholics, gamblers, thieves, drunkards, morphine addicts, prostitutes and other “undesirables” in the Christian society. Within a few months she gathered a congregation of some 3,000 people in a music-hall building frequented mostly by soldiers and sailors. In 1867, Booth had only 10 full-time workers, but by 1874, it had grown to 1,000 volunteers and 42 evangelists all serving under the name “The Christian Mission”. William Booth assumed the title of general superintendent, with his followers calling him “General.” While reading a printer’s proof of the 1878 annual report, Booth noticed the statement “The Christian Mission is a volunteer army.” Crossing out the words “volunteer army,” he penned in “Salvation Army.” From those words came the basis of the foundation deed of The Salvation Army. From that point, converts became soldiers of Christ and were known then, as now, as Salvationists.
Women in Salvation Army: Catherine was co-founder of The Salvation Army, along with her husband William Booth. Because of her influence in the formation of The Salvation Army she was known as the 'Mother of The Salvation Army'. She was in-charge of the changes in the new organization, designing the flag, Ranks, Uniforms, and bonnets for the ladies, and contributed to the Army's ideas on many important issues and matters of belief. The basic unit of the Army is the corps, commanded by an officer of a rank ranging from lieutenant to brigadier, who is responsible to a divisional headquarters.
Doctrines of Salvation Army: Catherine did not believe that the sacraments are essential to salvation of the soul. The doctrines of the Salvation Army include the basic principles common to most Protestant evangelical denominations. They sought to bring into their worship services an informal atmosphere that would put new converts at their ease. Joyous singing, instrumental music, clapping of hands, personal testimony, free-prayer, and an open invitation to repentance characterize the services.
Hallelujah Lassies: From the very beginning, the Salvation Army welcomed the service of women in the ministry. As a lay preacher in her own right, Catherine began recruitment of young women, mostly from the working classes, later called Hallelujah Lasses, whose task was to bring relief to females and children of slums. She believed in the potential of female ministry as a powerful tool to reach new audiences. Subsequently the value of female ministry was proclaimed by The Salvation Army and a statement regarding sexual equality in ministry was published in The Salvation Army’s Orders and Regulations. The women ministers enjoyed equal rights with a man in the Church. In 1878, 41 of the total 91 Salvation Army ministers in the field were women. Indeed, many of these women were girls – Hallelujah Lassies as they were termed. Catherine mentored the ‘Hallelujah lasses’, who preached in the streets and provided social care to the poor. William Booth wrote that "the best men in my Army are women”.
Opposition for Women in Ministry: The Church of England were at first extremely hostile to the Salvation Army. Lord Shaftesbury, a leading politician and evangelist, described William Booth as "anti-christ". One of the main complaints against Booth was his "elevation of women to man's status". . Mission volunteers were often harassed and sometimes physically assaulted as they marched through the streets with their signs and musical instruments calling everyone to their outdoor tent meetings. They launched an offensive throughout the British Isles, in some cases facing real battles as organized gangs mocked and attacked them. In spite of violence and persecution, 250,000 people were converted under the ministry of The Salvation Army between 1881 and 1885.
Catherine’s Social Work: Reclaiming women from a life of prostitution was a significant part of the mission work. She was horrified by the circumstances of "mill girls;" those who began work at age seven or eight years of age to help support a family often headed by an alcoholic father. Catherine also spoke to people in their homes and held cottage meetings for converts. She appalled at the situations of prostitutes, delinquent women, alcoholics and the homeless. She organized Food for the Million shops where the poor could buy a cheap meal. Catherine encouraged women to take up more active roles in society as she strongly believed in the moral and social equality of men and women. Her ministry was very popular, attracting audiences, which often included members of the middle-class who wanted to contribute to the evangelization of destitute slum dwellers. Catherine lobbied Queen Victoria to seek legislation for safeguarding females against Child prostitution, in the form of the "Parliamentary Bill for the Protection of Girls in 1885.
Salvation Army in overseas: Salvation Army spread quickly over Britain and then expanded internationally. Catherine trained her own children for ministry in the Salvation Army. The Booths had eight children: Bramwell, Ballington, Kate, Emma, Herbert, Marie, Evangeline, and Lucy. Two of their offspring, Bramwell and Evangeline, later became Generals of The Salvation Army. Kate Booth was the first missionary to France and later began a chapter in Switzerland. When they decided to officially inaugurate the work of the Salvation Army in America, Commissioner Railton was sent with the Splendid Seven, a team of seven women. In the early 21st century the Salvation Army was at work in more than 130 countries with 30 lakhs members and other political entities, where it preached the Gospel and operated thousands of evangelical centers, social welfare institutions, hospitals, schools, and other agencies. Its international headquarters are in London.
Death of Catherine: Towards the end of her life, Catherine was ill with cancer. This was a deep blow to William as Catherine had been his closest companion and had been a considerable force in Army life, known for her effective oratory and powerful intellect. Although she could not attend the Salvation Army’s twenty-fifth anniversary celebration, she sent these stirring words: “My dear children and friends, my place is empty but my heart is with you. You are my joy and crown. Your battles, sufferings and victories have been the chief interest of my life for these twenty-five years…. I am dying under the Army flag and it is yours to live and fight under. God is my Salvation and refuge in the storm. I send you my love and blessings”. On October 4, 1890, Catherine Booth, at the age of 61, passed away in William's arms with her family around her. Her body was placed in a coffin with a glass panel and visited by almost 40,000 mourners; 36,000 attended her funeral in London.
Legacy: Catherine Booth was a reformer who dared to speak the truth that burned within her. She believed in revivalism with all of her soul. She loved unprivileged with her heart and she reached out to them with her hands. She had firm convictions on a broad range of issues, such as social work among the poor and destitute, abstinence from alcohol, the legal age of consent for girls, vegetarianism, and the humane treatment of animals. She also said that women must have full equality with men in Christian ministry. Many agreed. No man of Catherine’s era exceeded her in popularity or spiritual results, including her husband. Catherine Booth, known as the Mother of the Salvation Army, was one of the most extraordinary women of the Victorian era.
Dear beloved readers, as you know that when Jesus was hanging on the Cross, all the male disciples left Him alone and only the women were under the Cross. Because of this the resurrected Jesus Christ, revealed Himself first to the woman and through her the mesaage of resurrected Christ passed on to men and others. Jesus first revealed Himself as Messiah to the woman. In the early church for a first 500 years of the history of Christianity, many women served as theologians, evangelists, apostles, prophetess, deaconess, presbyters and Bishops. The women made the local Christianity into an international level. So the role of women is highly regarded in the early church.
When Christianity become the official religion of the Roman empire in the 5th century, the male dominated Roman culture influenced Christianity. Through the misinterpretations of 1 Cor 14:34-36, 1 Tim 2:11-15, 1 Cor 11:3, Eph 5:22-24, the male dominated Church leaders silenced the voices of women in the Church for the past 1500 years.
We are living in the 21st Century and the things are rapidly changing, but the church leaders stereotyped women and hesitated to ordain them as Deacons, Presbyters and Bishops. God created men and women in His own Image and the Church leaders fail to accept this reality and it is totally against God's plan in salvation History.
As we are living in India, we have 1,12,345 churches out of 6,75,982 villeges. Until and unless you rise as Deborah, as a mother of India, the villagers will be ceased. Jesus gave His life for the empowerment of women. So take this as a challege and do some thing for the extension of His Kingdom wherever you are. The Church may not recognize you but remember that the building is not the church but it is the fellowship of believers. So let your home be a place for your church, you can share about Jesus among your friends in schools, colleges and universities. You can share about Jesus in your work places among your friends. It is my prayer that you can be a channel of blessings to many others for His Glory. Amen.