யூகித்தல் (கணிப்பு)
*********************
சில மாதங்களுக்கு முன்பு பத்திரிக்கையில் ஒரு செய்தி படித்தேன். +2 தேர்வு எழுதிய மாணவன் exam result வரும் முன்னால் fail ஆகி விடுவோமோ என்று தற்கொலை செய்து கொண்டான். Result வந்த போது 1000 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்து pass ஆகி இருந்தான். அவன் தற்கொலை செய்ய காரணம் தவறாக யூகித்த (நினைத்த) காரியம் ஆகும்.
இதே போல் வேதத்தில் அநேகர் தவறாக யூகித்து நஷ்டம் அடைந்தார்கள். அதில் சில பேரை நாம் இங்கு காண்போம்.
1) சிறைசாலைக்காரன்: அப்.16:27,28. பவுலும், சிலாவும் ஒடிப் போனார்கள் என்று *எண்ணி* ( யூகித்து) பட்டயத்தை உருவி தன்னை கொலை செய்து கொள்ள போனான். பவுலும் சிலாவும் சிறையில்தான் இருந்தார்கள். பாருங்கள்! தவறுதலாக யூகித்தல் சிறைசாலைக்காரனை தற்கொலைக்கு நேராக வழி நடத்தியது.
2) மரியாள்: மரியாள் இயேசுவை தோட்டக்கார்ர் என்று *எண்ணினாள்* ( யூகித்தாள்) (யோ 20-15). அதன் விளைவு கண்ணீர்.
3) ஏலி: 1 சாமு 1-13. அன்னாள் குடித்து வெறித்திருக்கிறாள் என்று ஏலி *நினைத்தான்* ( யூகித்தான்). அதன் விளைவு ஏலி அறியாமைக்குள் நடத்தப்பட்டான்.
4) சிஷர்கள்: சிஷர்கள் கடலில் நடக்கிற இயேசுவை ஆவேசம் ( பேய்) என்று *எண்ணினார்கள்* ( யூகித்தார்கள்). (மாற்கு 6-49). அதன் விளைவு கலக்கமடைந்தார்கள் அலறினார்கள்.
5) இயேசுவின் தாயும், தகப்பன் யோசேப்பும் லூக் 2-44. இயேசு பிரயாணக்கார்ரின் கூட்டத்தில் இருப்பார்கள் என்று *நினைத்தார்கள்* ( யூகித்தார்கள்). இதனால் துன்பம் அடைந்தார்கள்.
6) சிம்சோன் மாமனார்: சிம்சோன் இடம் "நீ அவளை பகைத்து விட்டாய் என்று *எண்ணி,*( யூகித்து) அவளை உன் சிநேகிதனுக்கு கொடுத்து விட்டேன்" (நியாதி 15-2) என்றான். இதன் விளைவு? கோபம் அடைந்த சிம்சோன் 300 நரிகளை பிடித்து அதன் வாலில் தீ பந்தங்களை கட்டி பெலிஸ்தர் வெள்ளாண்மையில் ஒட விட்டு நஷ்டத்தை ஏற்படுத்தினான். சிம்சோன் மாமனார் தவறாக எண்ணியதன் விளைவை பார்த்திர்களா?
7) உயிர்த்தெழுந்த இயேசு சிஷர்கள் நடுவே நின்ற போது ஒரு ஆவியை ( பிசாசை) காண்பதாக *நினைத்தார்கள*் ( லூக் 24-37). அதன் விளைவு சிஷர்கள் கலங்கினார்கள், பயந்தார்கள்.
8) ஆதி 26-7 ஆபிரகாம் தன் மனைவியின் நிமித்தம் தன்னை கொலை செய்வார்கள் என்று *எண்ணினான்*. அதனால் பயம் உண்டானது.
*"தண்ணீர் வெட்கிய போது"*
*_"ஆதியிலே வார்த்தை இருந்தது,… சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று;"_* யோவான் 1:1-3
*புகைப்படமும், வீடியோபடமும் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு இயேசு ஏன் உலகத்திற்கு வந்தார்? இக்கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திற்குப் பின் அவர் வந்திருந்தால் அவருடைய படத்தைப் பார்ப்பதின் மூலம் அவருடைய போதனைகள் அநேக மக்களை சென்றடைந்திருக்கும், அல்லவா? ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளை விட மிக முக்கியமானது.*
*“அப்படி இல்லை” என்று ரவி சகரியாஸ் கூறுகிறார்.*
*“ஆயிரம் படங்களை விட ஒரு வார்த்தை மிகவும் முக்கியமானது” என்று அவர் கூறுகிறார். அதற்குச் சான்றாக ரிச்சர்ட் கிராஷா என்ற கவிஞரின் மிகப் பிரபலமான வரிகளாகிய “தண்ணீர் அதன் எஜமானைப் பார்த்து வெட்கியது” என்ற வரிகளை மேற்கோளாகக் காண்பிக்கிறார். இந்த ஒரு எளிய வரியின் மூலம், கிராஷா இயேசு கிறிஸ்து செய்த முதலாம் அற்புதத்தின் சாரத்தை வெற்றிகரமாகப் பதிவு செய்துள்ளார் (யோவா 2:1-11). சிருஷ்டியானது இயேசுவை அதன் சிருஷ்டிகராக அறிந்து கொண்டது. ஒரு சாதாரண தச்சனால் தண்ணீரை திராட்சைரசமாக மாற்ற இயலாது.*
*மற்றொருமுறை “இரையாதே அமைதலாயிரு” என்ற வார்த்தைகள் கடலில் ஏற்பட்டபுயலை அடக்கின பொழுது, ஆச்சரியப்பட்ட அவரது சீஷர்கள் “காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே இவர் யாரோ?” என்று கேட்டார்கள் (மாற் 4:39-41). பின்பு ஒரு முறை இந்த மக்கள் பேசாமலிருந்தால், “இந்தக் கல்லுகளே கூப்பிடும்” என்று பரிசேயர்களிடம் இயேசு கூறினார் (லூக் 19:40). கற்கள் கூட அவர் யார் என்பதை அறிந்திருந்தன.*
*“அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்” (யோவா 1:14) என்று யோவான் நமக்கு கூறுகிறார். “ஆதிமுதல் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும்… ஜீவவார்த்தையைக் குறித்து உங்களுக்கு அறிவிக்கிறோம்” (1 யோவா 1:1) என்று யோவான் அவருடைய கண்களால் கண்ட அனுபவத்தைப் பற்றி எழுதினார். யோவானைப் போல, நாமும் காற்றும், கடல் தண்ணீரும், கீழ்ப்படிந்த இயேசுவைப்பற்றி, நமது வார்த்தைகளை பயன்படுத்தி, பிறருக்கு அறிமுகப் படுத்தலாம்.*
*"எழுதப்பட்ட வார்த்தையாகிய வேதாகமம் ஜீவனுள்ள வார்த்தையாகிய இயேசு கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறது."*
"இந்த நாள் தங்களுக்கு ஆசீர்வாதமான நாளாக அமைவதாக"
