*மனுஷன் முன்பாக செய்ய வேண்டியது*
-----------------------------------------------------------
1) கர்த்தரை அறிக்கை பண்ண வேண்டும் - லூக் 12:8
2) துன்மார்க்கன் முன்பாக இருக்கும் போது நாவை கடிவாளத்தால் அடக்கி வைக்க வேண்டும் - சங் 39:1
3) நரைத்தவனுக்கு முன்பாக எழும்ப வேண்டும் - லேவி 19:32
4) புறம்பே இருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாக நடக்க வேண்டும் - கொலோ 4:5
5) மனுஷனுக்கு முன்பாக யோக்கியமானவைகளை செய்ய வேண்டும் - 2 கொரி 8:21
6) மனுஷர் முன்பாக கர்த்தரை நம்ப வேண்டும் - சங் 31:19
7) மனுஷனுக்கு முன்பாக குற்றமற்ற மனசாட்சி உடையவர்களாக வேண்டும் - அப் 24:16
8) மனுஷனுக்கு முன்பாக நல்மனசாட்சி உடையவர்களாக இருக்க வேண்டும் - அப் 23:1
*"விருதாவாயிராது"*
*_"ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து, நீங்கள் உறுதிப்பட்டவர்களாயும், அசையாதவர்களாயும், கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக."_* 1 கொரிந்தியர் 15:58
👉 *“சிறந்ததே நடக்கும் என நம்பு, ஆனால் மிக மோசமான விளைவிற்கு தயாராகவுமிரு,” என எனக்கு பரிச்சயமான நிதி ஆலோசகர் ஒருவர் பணத்தை முதலீடு செய்வதிலுள்ள உண்மையான நிலையை விளக்கினார். நம் வாழ்வில் நாம் தீர்மானிக்கும் அநேக தீர்மானங்களின் விளைவுகளும் நிச்சயமற்றதாகவே உள்ளது. ஆனால் நாம் தேர்ந்தெடுக்கும் பாதை அப்படியல்ல. ஏனெனில் நாம் தெரிந்துகொண்ட இப்பாதையில் பயணிக்கும்பொழுது, என்ன நேர்ந்தாலும் இறுதியில் அது ஒரு வீண் பிரயாசமாய் இருக்கவில்லை என்பதை நாம் அறிந்துகொள்வோம்."*
ஒழுக்கக் கேட்டிற்கு பெயர்பெற்ற கொரிந்து பட்டணத்தில், அப்போஸ்தலனாகிய பவுல் அங்குள்ள கிறிஸ்தவர்களோடு ஒரு வருடம் தங்கியிருந்தார். அவர் அங்கிருந்து சென்ற பின், கிறிஸ்துவுக்கென்று சாட்சியாக ஜீவிப்பதில் எப்பயனுமில்லை என்று தவறாக நினைத்து சோர்ந்து போய்விடாதிருக்கும்படி, கடிதத்தின் மூலம் அவர்களை உற்சாகப் படுத்தினார். மேலும் ஒரு நாள் தேவன் திரும்பவும் வந்து, மரணத்தை விழுங்கி ஜெயமெடுப்பார் என உறுதியளித்தார் (1 கொரி. 15:52-55).
*"இயேசுவுக்காக உண்மையாக ஜீவிப்பது கடினமானதாகவும், சோர்வளிப்பதாயும், சில சமயம் அபாயகரமானதாகவும் இருக்கலாம், ஆனால் அது ஒருபோதும், பிரயோஜனமற்றதோ அல்லது வீணானதோ அல்ல. நாம் தேவனோடு நடந்து, அவருடைய பிரசன்னத்திற்கும், வல்லமைக்கும் சாட்சியாய் இருக்கும் பொழுது, நம்முடைய வாழ்க்கை விருதாவாயிராது! இது நிச்சயமே."*
*"இயேசு கிறிஸ்துவுக்கென்ற நமது வாழ்வும் நற்சாட்சியும் ஒரு நாளும் விருதாவாயிராது."*
"காலை வணக்கம்"
"இந்த நாள் தங்களுக்கு ஆசீர்வாதமான நாளாக அமைவதாக"
